107 வது பிறந்தநாள் : திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை

எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

Update: 2024-01-17 10:36 GMT

எம்ஜிஆர் பிறந்த நாள் 

அதிமுக நிறுவனத்தலைவர்,முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்த நாளையொட்டி திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர், திருச்சி மாநகர் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் எஸ். நஜிமா பாரிக் BBA இளைஞர் அணி செயலாளர் சிந்தாமணி எல்.முத்துக்குமார்,மாணவரணி செயலாளர் ஜெ. இப்ராம்ஷா,கலிலுல் ரகுமான்,கருமண்டபம் ஞானசேகர்,ராஜேந்திரன்,ஐ.டி விங் வெங்கட் பிரபு,பகுதி செயலாளர்கள் வெல்லமண்டி சண்முகம், அன்பழகன். பூபதி, நாகநாதர் பாண்டி, சுரேஷ் குப்தா, ரோஜர், கலைவாணன், கவுன்சிலர்கள் கே..அம்பிகாபதி, அரவிந்தன்,நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News