தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு 

எம்ஜிஆரின் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்பல்கலைகழகத்தில் உள்ள எமஜிஆரின் திருவுருவப்பட்டத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்

Update: 2023-12-25 02:56 GMT
எம்ஜிஆர் சிலைக்கு மாலை
தஞ்சை, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி.ஆர்  36ஆவது நினைவு நாளை முன்னிட்டு,  துணைவேந்தர்  ஆணைக்கிணங்க நிருவாகக் கட்டடத்தில் உள்ள அன்னாரின்‌ திருவுருவச் சிலைக்கு, சுவடிப்புல முதன்மையர் முனைவர் த.கண்ணன் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில், மேனாள் தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் (பொ) முனைவர் மோ.கோ.கோவைமணி, மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன், சிற்பத்துறை தலைவர் முனைவர் வே.லதா, கல்வியாளர்கள், அலுவல்நிலைப் பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:    

Similar News