திருப்புவனத்தில் நள்ளிரவில் ஆட்டோ திருட்டு - போலீசார் விசாரணை

திருப்புவனத்தில் நள்ளிரவில் ஆட்டோ திருடப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Update: 2023-12-08 09:20 GMT

சிசிடிவி காட்சிகள் வெளியீடு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே திருப்புவனம் புதூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சாகுல் ஹமீது. இவர் ஆட்டோ ஓட்டி முடித்துவிட்டு இரவு எப்போதும் தனது வீட்டுக்கு எதிரே செல்லும் மதுரை டு ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் டீக்கடை ஓரமாக நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.

காலையில் எழுந்து வந்து வேலைக்கு செல்வதற்கு ஆட்டோவை பார்க்கும்போது ஆட்டோவை காணவில்லை. அதிர்ச்சியடைந்த ஆட்டோ ஓட்டுனர் சாகுல் ஹமீது அக்கம் பக்கத்தில் விசாரித்து பார்த்துவிட்டு திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அருகிலுள்ள டீக்கடையில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது நள்ளிரவு 12 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது,

இதுகுறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர், ஆட்டோவை திருடி சென்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News