கிருஷ்ணகிரி அருகே மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர் சக்கரபாணி

கிருஷ்ணகிரி அருகே விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார்.

Update: 2024-02-02 09:17 GMT

மிதிவண்டிகள் வழங்கிய அமைச்சர்

 கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், ஊத்தங்கரை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, மத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 346 மாணவ, மாணவிகளுக்கு ரூ 14, 24, 482 இலட்சம் மதீப்பீட்டில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித் தலைவர் கே. எம். சரயு, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும், பர்கூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மதியழகன் ஆகியோர் முன்னிலையில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

Tags:    

Similar News