குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கிய அமைச்சர் கீதாஜீவன்!

தூத்துக்குடியில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு அமைச்சர் கீதாஜீவன் தங்க மோதிரங்கள் அணிவித்தார்.

Update: 2024-03-03 12:53 GMT

அமைச்சர் கீதாஜீவன்

திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 71-வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மற்றும் ஊட்டசத்து ஆகியவற்றை தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினார். பின்னர் அங்கிருந்த நோயாளிகளிடம் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். அதனை தொடர்ந்து அரசு மருத்துவ மனையில் ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள ஜான் ஜீகன் முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு காலை உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் தூத்துக்குடி சில்வர்புரம் லூசியா மாற்றுத்திறனாளிகள் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல தலைவர்கள் வக்கீல் பாலகுருசாமி, கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கஸ்தூரி தங்கம், மாநகர துணைச்செயலாளர் கீதா முருகேசன், தொண்டரணி அமைப்பாளர் ரமேஷ், மகளிரணி அமைப்பாளர் கவிதா தேவி, பகுதி செயலாளர்கள் ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாவட்ட மருத்துவரணி தலைவர் அருண்குமார், மாநகர இளைஞரணி அமைப்பாளர்கள் அருண்சுந்தர்;, முருகஇசக்கி, துணை அமைப்பாளர்கள் ரவி, பிரவீன்குமார், கவுன்சிலர்கள் சரவணக்குமார், இசக்கிராஜா, விஜயலெட்சுமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News