ஊராட்சி மன்ற கட்டிடத்தை திறந்து வைத்த அமைச்சர்

கீரணிப்பட்டியில் ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்தினை, அமைச்சர் எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.

Update: 2023-10-20 16:00 GMT

அலுவலகத்தை திறந்து வைத்த அமைச்சர்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஊராட்சி ஒன்றியம், துரையூர் ஊராட்சி, கீரணிப்பட்டியில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ், ரூ.23.57 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஊராட்சிமன்ற அலுவலகக் கட்டிடத்தினை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி திறந்து வைத்தார்.


உடன் அரிமளம் ஒன்றியக்குழுத் தலைவர் மேகலாமுத்து, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவர் பொன்.இராமலிங்கம், ஊராட்சிமன்றத் தலைவர் திரு.முருகேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News