பட்டணம் பேரூராட்சி பகுதியில் அமைச்சர் மதிவேந்தன் வாக்கு சேகரிப்பு

பட்டணம் பேரூராட்சி பகுதியில் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரனை ஆதரித்து அமைச்சர் மதிவேந்தன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார்.

Update: 2024-04-08 15:52 GMT

அமைச்சர் வாக்கு சேகரிப்பு

பட்டணம் பேரூராட்சி பகுதியில் வேட்பாளர் வி.எஸ்.மாதேஸ்வரனை ஆதரித்து அமைச்சர் மதிவேந்தன் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டார். நா

டாளுமன்ற தேர்தலில் நாமக்கல் மக்களைத் தொகுதியில், திமுக கூட்டணி கட்சியான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில், வி எஸ் மாதேஸ்வரன் போட்டியிடுகிறார். நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் பேரூராட்சி பகுதியில், வேட்பாளர் வி.எஸ். மாதேஸ்வரனுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல்,

திறந்த வெளி வாகனத்தில் அமைச்சர் மருத்துவர் மா. மதிவேந்தன், தீவிரவாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபாட்டார். ப.மு.பாளையம், அய்யம் பாளையம், புதூர் மலையாம்பட்டி , வடுகம், பனங்காடு, உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் என பல வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய கழக செயலாளர் கே.பி. ஜெகநாதன்,

பேரூர் கழக செயலாளர் பொன்.நல்லதம்பி, மற்றும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி நிர்வாகி சேகர், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News