திருச்செந்தூா் கோயிலில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சுவாமி தரிசனம்

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சுவாமி தரிசனம் செய்தார். 

Update: 2024-02-03 03:05 GMT

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சுவாமி தரிசனம் செய்தார். 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் அனைத்து சந்நிதிகளிலும் தரிசனம் செய்த அவருக்கு திருக்கோயில் சாா்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.

முன்னதாக, கோயில் இணை ஆணையா் காா்த்திக் அமைச்சரை வரவேற்றாா். திருச்செந்தூா் நகா்மன்றத் துணைத்தலைவா் செங்குழி ரமேஷ், திமுக நகர செயலா் வாள்சுடலை, நகா்மன்ற உறுப்பினா் செந்தில்குமாா், வேல் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News