திருத்தணியில் 2500 பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பட்டா வழங்கல்
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருத்தணியில் 2500 பயனாளிகளுக்கு அமைச்சர் ஆர்.காந்தி பட்டா வழங்கினார்.
By : King 24X7 News (B)
Update: 2024-02-06 16:15 GMT
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஜி.ஆர்.டி கல்லூரி கூட்ட அரங்கில் நடைபெற்ற பட்டா வழங்கும் விழாவில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமையில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழா பேருரையாற்றி ,
2500 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். இதில் அரக்கோணம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெகத்ரட்சகன், திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரன், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன்,
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி. உமா மகேஸ்வரி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.