திருப்பூரில் அமைச்சர் சாமிநாதனின் தந்தை மறைவு

திருப்பூர் மாவட்டம், முத்தூரில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனின் தந்தை வயது மூப்பினால் இன்று காலமானார்.

Update: 2024-02-23 10:05 GMT

மறைந்த அமைச்சரின் தந்தை

தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் வெள்ளகோவில் மு. பெ.சாமிநாதனின் தந்தை பெருமாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பினால் இன்று காலை 7.50 மணியளவில் இயற்கை எய்தினார்.

அமைச்சர் சாமிநாதன் தந்தையாரின் இறுதி சடங்கு முத்தூரில் உள்ள பங்களா தோட்டத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News