ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய கட்டிடங்களை திறந்த வைத்த அமைச்சர் !

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதியில் புதிய கட்டிடங்களை அமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைத்தார்.

Update: 2024-02-28 07:28 GMT

ஸ்டாலின் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி கள்ளிமந்தையம், அரண்மனை வலசு பிரிவில் ரூ. 12.46 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா நடந்தது. ஒட்டன்சத்திரத்தில் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கட்டப்பட்ட 1000 மெ.டன் கொள்ளவு கொண்ட குளிர்பதன கிடங்கு திறப்பு விழா மற்றும் காளாஞ்சிபட்டியில் ரூ.10.81 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் திறப்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று திறந்து வைத்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உட்பட பலர் பங்கேற்றனர்.
Tags:    

Similar News