உதயநிதிஸ்டாலின் நிகழ்ச்சி: ஏற்பாடுகள் தீவிரம்

உதயநிதிஸ்டாலின் நிகழ்ச்சியில் 500 பேர் கலந்துகொள்ள குருந்தன்கோடு திமுக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2023-10-27 08:37 GMT

திமுகவினர் ஆலோசனை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக அலுவலகத்தில் நடந்த இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்திற்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சசி சுபாசிங் தலைமை வகித்தார். குமரி கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் பிரிட்டோசேம் முன்னிலை வகித்தார். இளைஞரணி நிர்வாகி ஸ்ரீராஜா வரவேற்றார். குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய கழக செயலாளர் பிஎஸ்பி சந்திரா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கி பேசினார். குமரி மாவட்டம் வருகை தரும் திமுக இளைஞரணி மாநில செயலாளரும் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு வழங்குவது. அழகியமண்டபத்தில் வைத்து நாளை (28ம் தேதி) நடைபெறும் மாவட்ட இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் குருந்தன்கோடு மேற்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பில் வெள்ளை சீருடையில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஒன்றிய துணைச் செயலாளர்கள் ரமணிரோஸ், முருகன், விஜயன், ஒன்றிய பொருளாளர் ஏசு ரெத்தினராஜ், மாவட்ட பிரதிநிதி ஜெயசீலன், பேரூர் செயலாளர்கள் ரெஜூலின் ராஜகுமார், சுஜெய் ஜாக்ஸன், சேவியர் ஏசுதாஸ், நெய்யூர் பேரூராட்சி தலைவி பிரதீபா, குளச்சல் சமீன், சிவகுமார், செல்வதாஸ், ஜெய்வின் ராஜா, இளைஞர் அணி நிர்வாகிகள் ஜாண் டிக்ஸன், பெர்லின், வின்சிங், சோனி, ஸ்டாலின் உட்பட பலர் கலந்து கொண்டனர். அருள்பிரபின் நன்றி கூறினார்.
Tags:    

Similar News