ஒத்தினிபட்டியைச் சேர்ந்த இளம் பெண் மாயம் !
நத்தம் அருகே ஒத்தினிபட்டியைச் சேர்ந்த இளம் பெண் மாயம்.நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-02 11:47 GMT
இளம் பெண் மாயம்
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள குட்டுப்பட்டி- ஒத்தினிபட்டியைச் சேர்ந்தவர் சந்தியா (19). இவர் 12ம் வகுப்பு முடித்தவுடன் மதுரையில் உள்ள உறவினர் வீட்டில் இருந்து வந்தார். இவர் திருவிழாவிற்காக கடந்த பிப்.26-ஆம் தேதி ஒத்தினிபட்டியில் உள்ள வீட்டிற்கு வந்திருந்தார். இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் வீட்டிலிருந்த சந்தியாவை காணவில்லை. அக்கம், பக்கம், உறவினர் வீடுகளில் அவரை தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இது குறித்து பெண்ணின் பெற்றோர் நத்தம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். வழக்குப் பதிவு செய்து மாயமான இளம்பெண் குறித்து விசாரணை செய்து தேடி வருகின்றனர்.