பாதுகாப்பற்ற நிலையில் வட்டார கல்வி அலுவலகம் - முகம் சுழித்த எம்.எல்.ஏ

அலங்காயம் வட்டார கல்வி அலுவலகத்தில் மழை நீர் புகாதவாறு சரிசெய்து பாதுகாப்பான முறையில் பொருட்கள் மற்றும் ஆவணங்களை வைக்குமாறு எம்.எல்.ஏ அறிவுறுத்தினார்.

Update: 2023-10-21 04:13 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இந்நிலையில் இந்த அலுவலகத்தில் வாணியம்பாடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கோ. செந்தில்குமார் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வட்டார கல்வி அலுவலகத்தில் பள்ளி மாணவ, மாணவிகளின் இலவச சீருடைகள், புத்தகங்கள் அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பதிவேடுகள் உள்ளிட்ட பொருட்கள் மழை நீர் புகுந்து முழுவதும் நனைந்து போய் பாதுகாப்பற்ற நிலையில் இருந்தது. இதை கண்ட அவர் அரசு அதிகாரிகளுக்கு உடனடியாக மழை நீர் புகாதவாறு சரிசெய்து பாதுகாப்பான முறையில் பொருட்கள் மற்றும் ஆவணங்களை வைக்குமாறு அறிவுரை கூறி முகம் சுழித்து சென்றார்.

Tags:    

Similar News