ஆதரவற்ற குழந்தைகளுக்கு புத்தாடை வாங்கி கொடுத்த எம்எல்ஏ
தனது மூன்று மாத ஊதியத்தில் ஆதரவற்ற குழந்தைகளுக்கு எம்எல்ஏ புத்தாடை வாங்கி கொடுத்ததார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-10-30 09:35 GMT
புத்தாடை வழங்கிய எம்எல்ஏ
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் பொன்னகரம் மற்றும் மருதுநகர் . சேத்தூர் என மூன்று ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் உள்ளது இதில் 236 ஆதரவற்ற குழந்தைகளுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தனது மூன்று மாத ஊதியத்தில் இருந்து 7வது ஆண்டாக காந்திசிலை ரவுண்டானாவில் அமைந்துள்ள தனியார் ஜவுளி கடைக்கு அழைத்து சென்ற சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தங்கப்பாண்டியன் குழந்தைகளுக்கு பிடித்தமான புத்தாடையை வாங்கி கொடுத்தார்.