மருத்துவ மாணவிக்கு லேப்டாப் வழங்கிய எம்எல்ஏ

செங்கல்பட்டு மாவட்டம், இடக்கழிநாடை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி அமிர்தத்துக்கு உதவும் வகையில், எம்எல்ஏ சுந்தர் லேப்டாப் வழங்கினார்.

Update: 2024-06-24 10:09 GMT

 செங்கல்பட்டு மாவட்டம், இடக்கழிநாடை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவி அமிர்தத்துக்கு உதவும் வகையில், எம்எல்ஏ சுந்தர் லேப்டாப் வழங்கினார்.

செங்கல்பட்டு மாவட்டம்,இடக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட 5 -வார்டு பகுதியில் மின் இணைப்பு இல்லாமல் குடிசை வீட்டில் வசித்து வரும் நாகூரான் மகள் அமிர்தம் இவர் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற நிலையில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். அமிர்தம் மடிக்கணினி வேண்டுமென காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ விடம்  கோரிக்கை வைத்த நிலையில் பேரூர் துணை செயலாளர் ரஞ்சித் குமார், மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் சரண்ராஜ் ஆகியோரின் ஏற்பாட்டில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ரூபாய் 50 ஆயிரம் மதிப்பிலான மடிக்கணினி மற்றும் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இதனை காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, பேரூராட்சி மன்ற தலைவர் சம்யுக்தா அய்யனார் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கினார்கள் 

Tags:    

Similar News