பூலம்பாடி அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை எம்எல்ஏ ஆய்வு

பூலம்பாடி அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை எம்எல்ஏ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Update: 2024-01-13 10:01 GMT

விடுதியை ஆய்வு செய்த எம்எல்ஏ

பெரம்பலூர் மாவட்டம் பூலாம்பாடி அரசுமேல் நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதியை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடைந்த தரைத்தளத்தை பார்வையிட்ட அவர் அவற்றை சீர் செய்ய உரியநடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும் சமையலறையை பார்வையிட்ட சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாணவர்களுக்கு நல்லமுறையில் உணவு சமைத்து கொடுக்குமாறு அறிவுறுத்தினார். பின்னர் விடுதி வளாகத்தில் மரக்கன்றினை நட்டுவைத்தார்.

அப்போது மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பாஸ்கர், வேப்பந்தட்டை மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் நல்லதம்பி, வேப்பந்தட்டை ஒன்றிய துணை பெருந்தலைவர் ரெங்கராஜ், பூலாம்பாடி பேரூராட்சி தலைவர் பாக்கிய லெட்சுமி செங்குட்டுவன், பூலாம்பாடி பேரூராட்சி துணை தலைவர் செல்வ லெட்சுமி சேகர் மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News