பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் எம்எல்ஏ திடீர் ஆய்வு !

தமிழ்நாடு முழுவதும் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட அரசு உயர் துவக்கப்பள்ளிகளில் எம்எல்ஏ திடீர் ஆய்வு செய்தார்.

Update: 2024-06-08 09:04 GMT

முத்துராஜா

தமிழ்நாடு முழுவதும் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மாநகராட்சிக்குட்பட்ட அரசு உயர் துவக்கப்பள்ளி (Govt Upper Primary ) பள்ளியில் ஆய்வு மேற்கொண்டு, பள்ளி வளாகம் சுகாதாரமான முறையில் உள்ளதா?, வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளனவா?, கழிப்பறைகள், சுகாதாரமான முறையில் உள்ளதா? என்பது குறித்து ஆய்வு செய்ததோடு, வரவிருக்கும் காலாண்டில் மாணவ மாணவிகளுக்கு விநியோகிக்க புத்தகங்கள் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்தும் ஆசிரியர்களிடம் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா கேட்டறிந்தார். மேலும் இந்த ஆய்வின்போது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்து கட்டப்பட்டு வரும் வகுப்பறை கட்டிடங்களைப் பார்வையிட்டு எம்எல்ஏ டாக்டர் முத்துராஜா ஆய்வு செய்தார் இந்நிகழ்வின்போது நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, பால்ராஜ் உள்ளிட்டோறும், வட்டச் செயலாளர் தராமச்சந்திரன், திமுக நிர்வாகிகள் தங்கதுரை உள்ளிட்டோறும் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News