இனிப்புகளை வழங்கி மாணவர்களை வரவேற்ற எம்எல்ஏ
விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி மாணவிகளை மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி இனிப்புகள் வழங்கி வரவேற்றார்.;
Update: 2024-06-11 06:51 GMT
மாணவிகளை வரவேற்ற எம்எல்ஏ
மதுரவாயல் சட்டமன்றத் தொகுதி, வார்டு-151, அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளி, விடுமுறை முடிந்து முதல் நாள் பள்ளிக்கு வந்த மாணவ செல்வங்களை இனிப்புகள் வழங்கி உற்சாகப்படுத்தி வரவேற்கும் நிகழ்ச்சியில் மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர் கணபதி கலந்து கொண்டு மாணவிகளுக்கு இனிப்புகளை வழங்கி வரவேற்று உற்சாகப்படுத்தினர். இந்நிகழ்வில் மண்டலம்-11, மண்டலக் குழுத் தலைவர் நொளம்பூர் வே.ராஜன், M.C., பகுதி துணை செயலாளர் இரா.பால்பாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள் V.விஜயன், R.சேகர், க.பிருந்தாவனம், அவை தலைவர் செ.ராமையா, துணை செயலாளர்கள் K.முரளி, விமலா சேகர், பொருளாளர் V.பன்னீர்செல்வம், பகுதி பிரதிநிதிகள் கோ.கண்ணதாசன், K.குமார், M.சுந்தர், N.துரை, அணிகளின் அமைப்பாளர்கள் பா.தனசேகர், P.ரகு, P.K.சண்முகம், E.பிரசாந்த், R.ராஜேஷ், வட்ட நிர்வாகிகள் ஆட்டோ கிருஷ்ணன், M.தங்கராஜ், லோகேந்திரபாபு, செந்தில்குமார், செ.ராஜா, பாலாஜி , சுரேஷ், G.ராமதாஸ், பரிமளா, நாகராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.