அரசு பள்ளி முப்பெரும் விழாவில் எம்.எல்.ஏ பங்கேற்பு

ஜெயங்கொண்டம் அரசு மாதிரி பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் எம்.எல்.ஏ கண்ணன் பங்கேற்றார்.

Update: 2024-02-09 14:27 GMT


ஜெயங்கொண்டம் அரசு மாதிரி பள்ளியில் நடந்த முப்பெரும் விழாவில் எம்.எல்.ஏ கண்ணன் பங்கேற்றார்.


அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைபள்ளியில் இலக்கியமன்ற விழா, 77 ஆவது ஆண்டு விழா உள்ளிட்ட முப்பெரும் விழா இன்று நடைப்பெற்றது. இதில் ஜெயங்கொண்டம் எம்எல்ஏ கண்ணன் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு ரசித்தார்.

இதனையடுத்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் அப்பள்ளி தலைமையாசிரியர், நகராட்சி உறுப்பினர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News