மோடி 3.0 : பாஜகவினர் கொண்டாட்டம்

மத்தியில் பாஜக மூன்றாம் முறையாக ஆட்சி அமைப்பதை கொண்டாடும் வகையில் விருதுநகரில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் தலைமையில் பாஜகவினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Update: 2024-06-10 03:17 GMT

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தலில் வாக்கு பதிவு நடைபெற்றது. அதனையொட்டி கடந்த ஜூன் நான்காம் தேதி இந்தியா முழுவதும் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது இந்தியா முழுவதும் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் பாரதிய ஜனதா மற்றும் அதன் கூட்டணி கட்சி கள் இந்தியா முழுவதும் 241 தொகுதிகளை கைப்பற்றி மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது.

அதனை முன்னிட்டு நேற்று இந்தியாவின் மூன்றாவது முறையாக பாரத பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றார். அதனைக் கொண்டாடும் விதமாக விருதுநகர் மாரியம்மன் கோவில் முன்பு பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன் தலைமையில் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாஜகவினர் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் மேலும் இந்த நிகழ்வின் போது பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் காமாட்சி சிந்தனையாளர் பிரிவு மாவட்ட தலைவர் வி .பி . என். வடிவேல், மாவட்ட துணைத் தலைவர் குமரேசன், மகளிர் அணி நகர தலைவர் அமைதி நாகராஜன், பாஜக நகர தலைவர் நாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர் மேலும் இந்த நிகழ்வுக்கான ஏற்பாட்டினை நகரப் பொதுச் செயலாளர்கள் மணி ராஜன் மற்றும் பிரபு ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்

Tags:    

Similar News