மோடி 3.0 : ராசிபுரத்தில் பாஜகவினர் கொண்டாட்டம்

மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்கும் நரேந்திர மோடிக்கு, வாழ்த்து தெரிவித்து, பாஜகவினர், பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கி பதவி ஏற்பு விழாவை உற்சாகமாகக் கொண்டாடினர்..

Update: 2024-06-10 07:09 GMT

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக சார்பில் 3-வது முறையாக நாட்டின் பிரதமராக கட்சியின் மூத்த தலைவர்  நரேந்திர மோடி நேற்று மாலை 7:15 மணிக்கு பதவி ஏற்றார். இதனை முன்னிட்டு பாஜகவினர் பதவியேற்பு விழாவை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி, 3-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பதை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன

. இராசிபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாஜகவின் சார்பில் புதிய பேருந்து நிலையம் அருகே, இராசிபுரம் நகரத் தலைவர் பி. வேல்முருகன், அவர்கள் தலைமையில் பாரத மாதா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் படங்கள் வைக்கப்பட்டு, பதவி ஏற்பு விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அப்போது பாஜகவினர், பட்டாசுகள் வெடித்து அனைவருக்கும் லட்டு இனிப்புகள் வழங்கி, பதவி ஏற்பு விழாவை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

மேலும், பிரதமர்  நரேந்திர மோடிக்கும், அவரது அமைச்சர்களுக்கும் வாழ்த்து தெரிவித்து இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை பரிமாறிக்கொண்டனர். சாலைகளில் செல்வோர், பேருந்து பயணிகள், இருசக்கர வாகன ஓட்டிகள் உள்பட பலருக்கும் பாஜகவினர் இனிப்புகள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில், நாமக்கல் மாவட்ட பாஜக செயலாளர் S. திவ்யா, இராசிபுரம் நகரத் தலைவர் வேல்முருகன், நகரத் துணைத் தலைவர் கார்த்தி, குமார், p நகர பொதுச்செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் தொகுதி ராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் கதிரேசன், சுற்றுச்சூழல் பிரிவு செயலாளர் சதீஷ் சீனிவாசன், கிளைத்தலைவர்கள் துளசிராமன், பாஞ்சாலி, சந்தோஷ், குமார், மாநில, மாவட்ட, நகர பாஜகவினர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News