மழைக்கால அவசர உதவி எண்கள்

மழைக்கால அவசர உதவிகளுக்கா மாவட்ட நிர்வாகம் எண்களை அறிவித்துள்ளது

Update: 2023-12-18 01:10 GMT
மழைக்கால அவசர உதவி எண்கள்
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரமாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கனமழை காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்பட்டு இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிப்பதற்காக மழைக்கால அவசர உதவிகளை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்ட பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும், மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தை தொடர்பு கொள்ள 1077 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் உதவி பெற 101 மற்றும் 112 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும், மின்சாரம் தொடர்பான புகார்களுக்கு மின்னகம் உதவி மையம் 94 987 94 987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மழைக்கால நோய்கள் தொடர்பான சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் எனவும் அவசர மருத்துவ உதவி பெற 108 என்ற எண்ணை தொடர்பு கொண்டு பயன்படுத்த கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பாக பொது மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News