சீர்காழியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைப்பு

சீர்காழியில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன.

Update: 2023-12-30 07:34 GMT

  சீர்காழியில் நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நேற்று மாலை 6 மணி வரை கடைகள் அடைக்கப்பட்டன.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் காலை 6 முதல் மாலை 6 மணி வரை கடையடைப்பு செய்து தங்கள் இரங்கலை வெளிப்படுத்தி உள்ளனர். சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோவில் சுற்றுவட்டாரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து வியாபாரிகள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News