மகன் மாயம் - தாய் புகார்

கள்ளகுறிச்சியில் பள்ளிக்கு சென்ற மகன் வீடு திரும்பாததால் தாய் காவல்துறையில் புகார் அளித்தார்.

Update: 2024-02-04 06:30 GMT

மகன் மாயம்

கள்ளக்குறிச்சி, வாய்க்கால் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் மகன் கம்பீர்,(15) அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கிறார். கம்பீர், கடந்த ஜனவரி 30ம் தேதி காலை 9 மணியளவில் பள்ளிக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அவரது தாய் சத்யா அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Tags:    

Similar News