மகள் மாயம் - தாய் போலீசில் புகார்
கள்ளகுறிச்சியில் மகளை காணவில்லை என தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.;
Update: 2024-02-29 09:57 GMT
மகள் மாயம்
கள்ளக்குறிச்சி அடுத்த நாகலுாரை சேர்ந்தவர் பரந்தாமன் மகள் பவித்ரா,19; தனியார் நர்சிங் கல்லுாரியில் முதலாமாண்டு படிக்கிறார். கடந்த 26ம் தேதி பெற்றோர் கள்ளக்குறிச்சி சென்ற நிலையில், பவித்ரா வீட்டில் தனியாக இருந்தார்.
அவர்கள் திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் பவித்ராவை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தாய் அளித்த புகாரின் பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.