சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை.

Update: 2024-03-08 05:38 GMT

தடுப்புச்சுவர் 

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியம் சிட்டியம்பாக்கத்தில் இருந்து வையாவூர் செல்லும் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக, ஏனாத்துார், கவுரியம்மன்பேட்டை, மருதம், தென்னேரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் சென்று வருகின்றனர். இச்சாலையின் குறுக்கே மழைநீர் செல்லும் சிறுபாலம் கட்டப்பட்டுள்ளது. இப்பாலத்திற்கு இரு பக்கவாட்டு பகுதியில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் அமைக்கப்படவில்லை. தெரு மின்விளக்கு வசதி இல்லாத அப்பகுதியில், இரவு நேரத்தில் இவ்வழியாக செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், கனரக வாகனத்திற்கு வழிவிட சாலையோரம் ஒதுங்கும்போது, சிறுபாலத்தை ஒட்டியுள்ள கால்வாய் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது. எனவே, சிறுபாலத்திற்கு தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி உள்ளனர்.
Tags:    

Similar News