தமிழ்க்கலை மரபினை செழிக்க வைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

தமிழ்க்கலை மரபினை செழிக்க வைக்க, தமிழ்ப் பல்கலைக்கழகம் - வர்ணம் ஆயிரம் அகாடமி இசை நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.;

Update: 2024-01-13 09:56 GMT
தமிழ் பல்கலைக்கழகம்

தமிழக அரசின் நிதி நல்கையில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன், வர்ணம் ஆயிரம் அகாடமி இசை நிறுவனம் தர வகுப்புகள் மற்றும் சான்றிதழ், பட்டய வகுப்புகள் நடத்துவதற்குரிய புரிந்துணர்வு ஒப்பந்தம்  செய்துள்ளது. 

கல்வியோடு கலை கற்போம், கலை வளர்ப்போம் எனும் தாரக மந்திரத்தோடு சென்னையில் இந்நிறுவனம் 13 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் வாயிலாக குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், யோகா போன்ற வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. 

Advertisement

இங்கு பயிலும் மாணவர்கள் மாநில அளவில்  நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று வெற்றியடைந்து தமிழ்க்கலையினை வளர்த்து வருகின்றனர். இவ்வகையில் தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மொழுது தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர். வி.திருவள்ளுவன் கூறுகையில், வர்ணம் ஆயிரம் அகாடமி இசை நிறுவனம் தமிழர் கலைகளைக் கற்பித்து வளர்க்கும் தேவைகளை அறிந்து, அவற்றை நிறைவேற்றும் வண்ணமாக தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்துடன் புடிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்துள்ளது.

இவ்வொப்பந்ததின் மூலம் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் வாயிலாக நடத்தப்பெறும் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், ஓவியம்,  ஆகிய பாடப்பிரிவுகள் வர்ணம் ஆயிரம் அகாடமி இசை நிறுவனம் வாயிலாக நடத்தப்பெற்று தமிழ்ப் பல்கலைக்கழகம் வழி தேர்வுகள் நடத்தவும் சான்றிதழ் வழங்கவும் வகை செய்யப்படும் எனத் தெரிவித்தார்.  தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன், தமிழ்ப்பல்கலைக்கழக பதிவாளர்(பொ)  முனைவர்.சி.தியாகராஜன், வர்ணம் ஆயிரம் அகாடமி இசை நிறுவனம் இயக்குநர் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தைப் பரிமாற்றிக்கொண்டனர். 

இந்நிகழ்வில் தமிழ்ப்பண்பாட்டு மைய இயக்குநர் முனைவர்.செ.கற்பகம், , கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News