காணி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்பி
காணி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்பி வழங்கினார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-14 11:47 GMT
நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்பி
திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ஞானதிரவியம் இன்று அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரையாறு, சேர்வலாறு பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 300 காணி குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் காணி மக்களிடம் அவர்களின் குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்வதாக வாக்குறுதி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் பிரதிநிதிகள், திமுகவினர் என திரளாக கலந்து கொண்டனர்.