முனியப்பன் கோவில் திருவிழா - பக்தர்கள் சிறப்பு வழிபாடு

மார்கழி செவ்வாயை முன்னிட்டு முனியப்பன் கோவில் திருவிழா ஆடு, கோழி பலியிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்

Update: 2023-12-27 06:48 GMT

திருவிழா

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பி.அக்ரஹாரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முனியப்பன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதம் 2-வது செவ்வாய் கிழமை திருவிழா பிரமாண்டமாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவிற்கு, பென்னாகரம், தர்மபுரி, அரூர், கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். கோவிலுக்கு திருவிழாவுக்கு வரும் பக்தர்கள் விரதமிருந்து அலகு குத்தியும், கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். முனியப்பன் வேடமிட்டு, குதிரையுடன் ஊர்வலமாக ஆட்டம் பாட்டத்துடன் கோவிலுக்கு வந்தனர். பெண்கள் பொங்கல் வைத்தும் தங்களது பல்வேறு வகையான நேர்த்தி கடன்களை செலுத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.
Tags:    

Similar News