தெருநாய்களை பிடித்த பேரூராட்சி நிர்வாகம் - பொதுமக்கள் மகிழ்ச்சி

Update: 2023-11-28 05:45 GMT

சாலையில் சுற்றி திரிந்த தெரு நாய்கள் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் பொது இடங்களிலும், சாலைகளிலும் தெருநாய்கள் சுற்றித்திரிந்தன. இதனால் அந்த வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகளும், மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டனர். இது குறித்து சமூக ஆர்வலர் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து பேரூராட்சி நிர்வாகத்துக்கு புகார் தெரிவித்து இருந்தார். இதை தொடர்ந்து ஆர்.எஸ்.மங்கலம் பேரூராட்சிநிர்வாகம் சார்பில் தெருநாய்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதை தொடர்ந்து மதுரையில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு ஆர்.எஸ்.மங்கலம் பகு தியில் சுற்றித்திரிந்த ௫௮ நாய்கள் பிடிக்கப்பட்டன. இந்த 58 நாய் களும் வேறு ஒரு இடத்தில் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து நாய்களை பிடித்து அப்புறப்படுத்திய ஆர். எஸ்.மங்கலம் பேரூராட்சி நிர்வாகத்துக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
Tags:    

Similar News