என் கல்லூரிக் கனவு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி துவக்கி வைத்த ஆட்சியர்

தர்மபுரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் 2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

Update: 2024-04-24 00:56 GMT

என் கல்லூரிக் கனவு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி துவக்கி வைத்த ஆட்சியர்

தருமபுரி மாவட்டம், ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12-ஆம் வகுப்பு பயின்ற மாணாக்கர்களுக்கு என் கல்லூரிக் கனவு உயர்கல்வி வழிகாட்டல் 2024 நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, இஆப., இன்று (23.04.2024) துவக்கி வைத்தார்.

உடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத், பழங்குடியினர் நல அலுவலர் பி.எஸ்.கண்ணன், உத்வேக பேச்சாளர் ஸ்டாலின் ராஜா, உயர்கல்வி வழிகாட்டுபவர் இளையராஜா, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன், தனி வட்டாட்சியர் (ஆதிந) வள்ளி, உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News