ரூ..22 லட்சம்... கொள்ளையடித்த மர்ம நபர்கள்
மதுராந்தகத்தில் ஏ.டி.எம்., மிஷினில் பணத்தை நிரப்ப வந்த வங்கி அதிகாரிகளின் கார் கண்ணாடியை உடைத்து, ரூ. 22 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
Update: 2023-12-22 12:33 GMT
ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்ப வந்த கார் இடதுபுற கண்ணாடியை உடைத்து 22 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளை. செங்கல்பட்டு மாவட்டம்,மதுராந்தகம் SBI வங்கியில் இந்தியா 1 வங்கியின் ATM நிலையத்தில், பணம் நிரப்புவதற்காக மதுராந்தகம் SBI வங்கியில் இருந்து 94 லட்சத்து 50 ஆயிரம் பணம் எடுத்துக் கொண்டு 2 ஊழியர்கள் காரில் மதுராந்தகத்தில் உள்ள செங்குந்தர் பேட்டை கடப்பேரி ஆகிய பகுதிகளில் உள்ள இரு ATM மில் பணத்தை நிரப்பிவிட்டு கடைசியாக மதுராந்தகம் பேரறிஞர் அண்ணா பேருந்து நிலையம் உள்ள இந்தியா 1 ATM மில் பணம் நிரப்பி கொண்டு இருந்த பொழுது மர்ம நபர்கள் கார் இடதுபுற கண்ணாடியை உடைத்து காரில் இருந்த 22 லட்சம் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.. இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீசார் திருடி சென்றனர் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்..