வெங்ககுடியில் தேடப்பட்ட வந்த நபா் பட்டாக்கத்தியுடன் கைது

வெங்ககுடியில் வழக்குகளில் தேடப்பட்ட வந்த நபா் பட்டாக்கத்தியுடன் கைது செய்யப்பட்டாா்.

Update: 2024-01-21 10:16 GMT

கோப்பு படம் 

வெங்கங்குடி பகுதியைச் சோ்ந்தவா் சித்தாா்த் (25). இவா், நிலுவை வழக்குகளில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து பிடிஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மண்ணச்சநல்லூா் காவல் துறையினா் வெங்கங்குடி பகுதியில் தேடிச் செல்லும்போது பட்டாக் கத்தியைக் காட்டி போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.

மேலும், போலீசாரை கண்டதும் சுற்றுச்சுவரில் தப்பியோடும்போது, காலில் காயமடைந்தாா். இதையடுத்து, திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து கைது செய்தனா்.

Tags:    

Similar News