நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம்: பணி நியமன ஆணை வழங்கல்

நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.

Update: 2023-12-31 10:27 GMT

பணி நியமன ஆணைகள் வழங்கல்

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் நாகையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

இந்த நிகழ்ச்சிக்கு நாகை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சீனிவாசன் வரவேற்றார் கூடுதல் ஆட்சியர் ரஞ்சித் சிங் தலைமை தாங்கினார். தாட்கோ தலைவர் உ மதிவாணன் முன்னிலை வகித்தார்.

விழாவில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் கலந்து கொண்டு பல்வேறு நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட்டவருகளுக்கு பணி நியமன ஆணையை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திமுகவைச் சேர்ந்த நாகை நகர் மன்ற தலைவர் மாரிமுத்து மாவட்ட வர்த்தக அமைப்பாளர் குலோத்துகள் மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினேஷ் தகவல் தொழில் நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் செல்வாஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News