பள்ளி மேலாண்மை குழு கூட்டம் - ஆட்சியர் பங்கேற்பு

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மேலாண்மை குழு கூட்டத்தில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டார்.

Update: 2024-01-06 10:52 GMT

பள்ளி மேலாண்மை குழு கூட்டத்தில் ஆட்சியர் பங்கேற்றார்

நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளியின் மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில் நாகை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டார். கூட்டத்தில் பள்ளிகளை தூய்மைப்படுத்துதல் , மின்சாரம் தொடர்பான தேவைகள் ,பள்ளி வளாகம் அருகில் போதை பொருள் பயன்பாடு தடுத்தல் , உயர்கல்வி வழிகாட்டுதல் , பள்ளி செல்லா இடை நின்ற குழந்தைகள் மற்றும் திறனுடைய குழந்தைகளை கண்டறியும் கணக்கெடுப்பு பணி மற்றும் இடை நின்றலுக்கு வாய்ப்பு உள்ள மாணவர்கள் 11 மற்றும் 12 வகுப்பு மாணவர்கள் திருப்பு தேர்வு மற்றும் பொதுத்தேர்வு எழுதுவதை உறுதி செய்தல் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
Tags:    

Similar News