நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் எம்.பி மறைவுக்கு அஞ்சலி

நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் எம்.பி மறைவுக்கு பொதுமக்கள்.அஞ்சலி.செலுத்தினர்.

Update: 2024-05-13 14:46 GMT

மறைந்த எம்.பி. செல்வராஜ்

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மற்றும் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ் எம்.பி அவர்கள் தொடர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.

அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ராசிபுரம் நகர ஒன்றிய குழு மற்றும் வெண்ணந்தூர் ஒன்றிய குழு சார்பில் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதில், நகர செயலாளர் எஸ்.மணிமாறன் அவர்கள் தலைமை வகித்தார். மேலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் வெண்ணந்தூர் ஒன்றிய செயலாளர் P.R செங்கோட்டுவேல் , முன்னாள் ஒன்றியசெயலாளர் M.A.P.ஜெயபால் , அனைத்திந்திய மாதர் தேசிய சம்மேளனம் மாவட்ட செயலாளர் எஸ்..மீனா, நகர துணை செயலாளர்கள் A.J.சாதிக்பாஷா, A.கிருஷ்ணமூர்த்தி, திராவிடர் விடுதலைக் கழகம் நகர செயலாளர் பிடல் சேகுவாரா, நகர பொருளாளர் P.சலீம் , மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள், என பலர் கலந்துகொண்டு செவ்வணக்கம் செலுத்தினர்.

Tags:    

Similar News