நாகர்கோவில்: கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது

நாகர்கோவிலில் கஞ்சாவை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கல்லூரி மாணவர் உட்பட 5 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 1.100 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-22 03:51 GMT
பைல் படம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக எழுந்த புகாரின் பேரில் நேற்று  திருவள்ளுவர் தெரு பூங்காவில் நேசமணி நகர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கே திருநெல்வேலி பகுதியை சேர்ந்த பாலிடெக்னிக் மாணவர் முருகேஷ் (22), பழவிளை சுஜித் (23), ஈத்தாமொழி முகம்மது இர்பான் (22), எறும்பு காடு மணிகண்ட பிரபு (36), கோட்டாறு சுரேஷ் (27) ஆகிய 5 பேர் விற்பனைக்காக ஒரு கிலோ 100 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. போலீசார் 5 பேரையும் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இந்த கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது என விசாரணை நடக்கிறது.
Tags:    

Similar News