முன்னாள் படைவீரர்களுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கு மற்றும் குறைத்தீர் கூட்டம் நாளை (பிப்ரவரி 22) நடைபெறுகிறது.

Update: 2024-02-21 10:26 GMT

மாவட்ட ஆட்சியர் உமா 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் முனைவோர் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் தகவல் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்களுக்கான தொழில் முனைவோர் கருத்தரங்கு மாவட்ட ஆட்சியர் தலைமையில் நாளை (பிப்ரவரி 22) மதியம் 12.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. அதில் தொழில் பயிற்சி இயக்குநர், இந்தியன் வங்கி, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், மாவட்ட மேலாளர், தாட்கோ, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் நாமக்கல் ஆகியோர் கலந்து கொண்டு துறை சார்ந்த திட்டங்கள் / பயிற்சிகள் குறித்து எடுத்துரைக்கவுள்ளனர். எனவே முன்னாள் படைவீரர்கள் இக்கருத்தரங்கில் திரளாக கலந்துகொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார். மேலும் அதனைத்தொடர்ந்து நடைபெற உள்ள முன்னாள் படைவீரர்கள் / சார்ந்தோர்கள், படைவீரர்களின் குடும்பத்தார்களுக்கான சிறப்பு குறைத்தீர்வு நாள் கூட்டத்தில் தங்களது குறைகளை மனுக்களாக எழுதி (இரண்டு பிரதிகள்) சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News