நாமக்கல் மேயா், துணை மேயருக்கு கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வாழ்த்து

நாமக்கல் மேயா், துணை மேயருக்கு கே.ஆா்.என்.இராஜேஸ்குமார் எம்.பி வாழ்த்து

Update: 2024-08-11 15:05 GMT

முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் கடந்த 01-01-1997 ஆம் ஆண்டு சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்தை துவக்கி வைத்தார். அதேபோல தமிழ்நாடு சட்டப்பேரவையில் நாமக்கல் நகராட்சியை கடந்த சில மாதங்களுக்கு மாநாகராட்சியாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் அறிவித்தார். அதன்படி நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்ந்துள்ளது.. ஒவ்வொரு முறையும் திமுக தலைமையிலான அரசு ஆட்சி செய்யும் போதும் மக்களின் நலனில் அக்கறை கொண்டு மக்களுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறது. தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸடாலின் jலைமையிலான திராவிட மாடல் அரசு நாமக்கல் நகராட்சியை மாநகராட்சியாக அறிவித்து அதற்கான மேயா் மற்றும் துணை மேயரையும் அறிவித்துள்ளது.

திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களின் பொற்கரங்களால் நாமக்கல் மாநகராட்சிக்கான அரசாணையை பெறுவதற்கு முன் நாமக்கல் மாநகராட்சியின் முதல் மேயராக பொறுபேற்க இருக்கும் து.கலாநிதி மற்றும் துணை மேயராக பொறுபேற்க இருக்கும் செ.பூபதி ஆகியோர் மாவட்ட திமுக அலுவலகத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமாரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். தொடா்ந்து அவா்களது பணி சிறக்க வாழ்த்தினார்.

Tags:    

Similar News