நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-05-10 14:46 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

திமுக நாமக்கல் மேற்கு மாவட்ட ஆலோசனை கூட்டம் இன்று திருச்செங்கோடு, வேலூர் ரோடு சி.ஹச்.பி காலனியில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில்ந மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம்.மதுராசெந்தில் தலைமையில் நடைபெற்றது.

ஒன்றிய கழக செயலாளர்கள் ஜி.தங்கவேல், கே.செல்வராசு கு.பழனிவேல், பி.பி.தனராசு, கே.கே.சண்முகம், எம்.தங்கவேல், என்.நாச்சிமுத்து, ஆர்.செல்வம், ஆ.இளங்கோவன், நகர கழக செயலாளர்கள் டி.கார்த்திகேயன், அ.குமார், டி.விஜயகண்ணன், பேரூர் கழக செயலாளர்கள் மு.திருமலை, எம்.ரமேஷ்பாபு, பி.முருகன், எஸ்.ராமமூர்த்தி, எஸ்.பி.கார்த்திராஜ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட கழக செயலாளர் திரு.எஸ்.எம்.மதுரா செந்தில் அவர்கள் தலைமை கழகத்தில் அறிவிக்கப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிப் பேசினார். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின் வருமாறு தீர்மானம் – 1 கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், திராவிட மாடல் அரசின் நல்லாட்சி நாயகர் தளபதியார் அவர்களின் முத்தான மூன்றாண்டு நல்லாட்சியில், தலைநிமிர்ந்த தமிழ்நாடாக இன்று ஏற்றமிகு நான்காம் ஆண்டில் அடியெடுத்து வக்கும் கழக தலைவர் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பாகவும் கழக நிர்வாகிகள் சார்பாகவும் நன்றி கலந்த வணக்கத்தை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் – 2 நாடாளுமன்ற தேர்தலில் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்ட கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கும் கழக இளைஞர் அணி செயலாளர் மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அண்ணன் சின்னவர் அவர்களுக்கும் இக்கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. தீர்மானம் – 3 நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் களப்பணியாற்றிய அனைத்து ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், பாக முகவர்கள், சார்பு அணி, கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளுக்கும் மாவட்ட கழகத்தின் சார்பாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

தீர்மானம் – 4 அரசு பள்ளியில் பயின்று இந்த வருடம் 10-ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பில் தேர்வான மாணவ, மாணவியர்களுக்கும், அரசு பள்ளியின் தரம் உயர பாடுபடும் ஆசிரியர் பெருமக்களுக்கும், இந்தியாவிலேயே கல்வியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்றிக் கொண்டுள்ள கழக தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் அவர்களுக்கும், பள்ளிக் கல்வித்துறைக்கும் இக்கூட்டத்தின் வாயிலாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் – 5 தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நிலையில், வருகின்ற ஜூன் 3-ஆம் தேதி முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை தலைமை கழக அறிவிப்பின்படி சிறப்பாக கொண்டாடும் வகையில் ஒன்றிய, நகர, பேரூர், கிளை, வார்டு பகுதிகளில் நலத்திட்ட உதவிகளை செய்திட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News