தேசிய ஒற்றுமை தின உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் தலைமையில், "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Update: 2023-10-31 12:55 GMT

உறுதிமொழி ஏற்பு


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சேக் முகையதீன் தலைமையில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் இன்று"தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மறைந்த சர்தார் வல்லபாய் படேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையில், அக்டோபர் 31ஆம் தேதியன்று நாடு முழுவதும் தேசிய ஒற்றுமை தினம் இந்திய அரசு சார்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.

தேசிய ஒருமைப்பாட்டின் மூலம் சுதந்திர இந்தியாவின் சிற்பியாக சர்தார் வல்லபாய் படேலின் பங்களிப்பை இந்தச் சந்தர்ப்பம் அங்கீகரிக்கிறது. தேசத்தின் பாதுகாப்பு, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களைத் தாங்கும் நமது மக்களின் உள்ளார்ந்த வலிமையை மீண்டும் உறுதிப்படுத்தும் நாள் இதுவாகும்.

இதை முன்னிட்டு "தேசிய ஒற்றுமை தினம்" உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, மாவட்ட வருவாய் அலுவலர் "இந்திய நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், பாதுகாப்பையும் பேணுவதற்கு என்னையே உவந்தளிப்பேன் என்றும், இந்த நல்லியல்புகளை எனது நாட்டு மக்களிடையே பரப்புவதற்கு அயராது பாடுபடுவேன் என்றும், உளமார உறுதியளிக்கிறேன் என்றார்.உறுதிமொழியை வாசிக்க அனைத்துத் துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Tags:    

Similar News