தாராபுரத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு

தாராபுரம் பேருந்து நிலையம் அருகே முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினர் சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

Update: 2024-05-10 09:57 GMT
நீர் மோர் பந்தல் 
முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் அணி சார்பில் தாராபுரத்தில் நீர்மோர் பந்தல் திறப்பு விழா புதிய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது. விழாவிற்கு நகர செயலாளர் ஜவகர் தலைமை தாங்கினார். திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் டிடி காமராஜ் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பிறகு அவர் பொதுமக்களுக்கு நீர்மோர், இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய் வழங்கினார் இதில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News