நெல்லை : நிவாரண பொருட்கள் வழங்கிய தெலுங்கானா ஆளுநர்

நெல்லையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு தெலுங்கானா, புதுச்சேரி மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நிவாரண பொருட்களை வழங்கினார்.

Update: 2023-12-26 01:33 GMT

நிவாரண பொருட்கள் 

நெல்லையில் பெய்த வரலாறு காணாத மழையால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடுவதற்கு நெல்லைக்கு நேற்று வருகை தந்த தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.இந்த நிகழ்வின் பொழுது எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News