ஆலங்குளம் அருகே சமுதாய நலக்கூட புதிய கட்டிட பணி துவக்கம் !

சமுதாய நலக்கூடத்தில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-03-15 06:18 GMT

பூமி பூஜை 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே திப்பணம்பட்டியில் ஒன்றிய பொது நிதியில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தில் மேற்கூரை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் ஜெயபாலன் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார் துவக்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனி துரை மாவட்ட கவுன்சிலர்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியம், ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா, உள்ளிட்டோர்ஏராளமான கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
Tags:    

Similar News