பயன்பாட்டுக்கு விடப்பட்ட புதிய குடிநீர் தொட்டி

புளியங்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

Update: 2024-02-23 01:54 GMT

புளியங்குடியில் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி மக்களின் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. 

தென்காசி மாவட்டம் புளியங்குடியில் மனிதநேய மக்கள் கட்சியின் 16வது ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு அரசு பொது மருத்துவமனைக்கு குடிநீர் தொட்டி அர்ப்பணிப்பு நிகழ்ச்சி நகர தலைவர் சையது அலி பாதுஷா தலைமையில் நடைபெற்றது. குடிநீர் தொட்டியை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமுமுக மாவட்ட செயலாளர் எம். எஸ். அப்துர் ரஹ்மான் துவக்கி வைத்தார்.

இதில் மமக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எம். எஸ். ஹமீது, தமுமுக விழி அணி மாவட்ட செயலாளர் ஷேக் அப்பாஸ், மமக நகர செயலாளர் முகைதீன் MC, தமுமுக நகரச் செயலாளர் அசன், நகர துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, குஞ்சு முகம்மது, நகர தொண்டரணி செயலாளர் அஜிஸ், நகர இளைஞரணி செயலாளர் ஜாபர் அலி, நகர மருத்துவ சேவை அணி அனிஷ், மனிதநேய வணிகர் சங்கம் நகரச் செயலாளர் இன்ஷாத் மற்றும் ஜாபர்கான் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News