புதிய அரசுக் கட்டிடங்கள்-துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி துவக்கி வைப்பு

Update: 2023-12-18 08:14 GMT
நியாய விலை கடை திறப்பு 
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் ஆராஞ்சி ஊராட்சி குமரகுடியில் ரூ 5.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கட்டிடம், ரூ5 லட்சம் மதிப்பீட்டில் காத்திருப்போர் கூடம், ரூ 4.70 லட்சம் மதிப்பீட்டில் காரிய மேடை ஆகியவற்றின் கட்டட திறப்பு விழாவிற்கு மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம் தலைமை தாங்கினார். சி.என்.அண்ணாதுரை எம். பி. ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு,ஒன்றியக் குழு துணைத்தலைவர் வாசுகி ஆறுமுகம், அட்மா குழு தலைவர் சிவக்குமார்,ஊராட்சி மன்ற தலைவர் விஜயாசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்து பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும், மக்கள்பயன்பெறும் வகையில் அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஆராஞ்சி ஊராட்சி முன்மாதிரி கிராமமாக வருவது குறித்தும் பேசினார்.

இதில், ஒன்றிய ஆணையாளர் விஜயலட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிச்சந்திரன், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர் ராஜசேகரன், கூட்டுறவு சார் பதிவாளர் கோகிலா, கூட்டுறவுசங்க செயலாளர் குணசேகரன், ஒன்றிய கவுன்சிலர் ராஜேந்திரன், வேடநத்தம்ஊராட்சி மன்ற தலைவர் குப்புசாமி,பொறியாளர் அணி மாவட்ட துணைத் தலைவர் பிரகாஷ், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பல்வேறு அணிகளின் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மேலும் கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மேக்களூரில் ரூ13.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டடத்தைஊராட்சி மன்ற தலைவர் கேசவன், அண்ணாதுரை எம்.பி. மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம்,ஒன்றிய குழுதலைவர் அய்யாக்கண்ணு ஆகியோர் முன்னிலையில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி குத்து விளக்கேற்றியும்,ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பேசினார். அதைத் தொடர்ந்து கடம்பை ஊராட்சியில் புதிய மேநீர் தேக்க தொட்டியையும் துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்.

Tags:    

Similar News