கீழ் நேத்தப்பாக்கம் கிராமத்தில் நியாய விலை கடை திறப்பு !

செய்யாறு அருகே கீழ் நேத்தப்பாக்கம் கிராமத்தில் நியாய விலை கடையை ஒ.ஜோதி திறந்து வைத்தார்.

Update: 2024-02-29 05:58 GMT

நியாய விலை கடை திறப்புவிழா

செய்யாறு அருகே அனக்காவூர் கிழக்கு ஒன்றியம் கீழ்நேத்தப்பாக்கம் கிராமத்தில் தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் 2022-2023 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 9 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்தார்.  இந்நிகழ்வில் அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சுப்பிரமணி அனக்காவூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் திராவிட முருகன் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags:    

Similar News