3 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் - நீலகிரி எம்.பி ஆ.ராசா துவக்கி வைத்தார்

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சை புளியம்பட்டி,பவானிசாகர் ஒன்றிய பகுதிகளில் 3 கோடி மதிப்பில் வளர்ச்சிப் பணிகள் - நீலகிரி எம்.பி ஆ.ராசா துவக்கி வைத்தார்

Update: 2024-02-27 07:13 GMT
ஈரோடுமாவட்டம், சத்தியமங்கலம், நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, பவானிசாகர் சட்டமன்ற தொகுதி, புளியம்பட்டி நகராட்சி, பவானிசாகர் வடக்கு, தெற்கு ஒன்றிய பகுதிகளுக்குட்பட்ட, நொச்சிக்குட்டை ஊராட்சி, பொன்மேடு பகுதியில் அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா மற்றும் புளியம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள, கே.வி.கே.அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் கலையரங்க கட்டிடம் திறப்பு விழா, புளியம்பட்டி நகராட்சி தொடக்கப்பள்ளியில் நான்கு வகுப்பறைகட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் பவானிசாகர் அடுத்துள்ள நல்லூர் ஊராட்சி புதுப்பாளையம் பகுதியில், நியாயவிலை கடை அடிக்கல் நாட்டு விழா, அங்கன்வாடி கட்டிடம் திறப்பு விழா, 3 கோடி மதிப்பிலான வளர்ச்சிபணிகளில், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தும் சிறப்பித்தார். நிகழ்ச்சியில் திமுக ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் நல்லசிவம் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோ கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News