9-ம் வகுப்பு மாணவி மாயம் - போலீசார் விசாரணை

காவேரிப்பாக்கம் அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-08 11:27 GMT

மாணவி மாயம் 

ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 14 வயது மாணவி. அதேப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தாள். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் வீட்டில் பெற்றோர்களுக்கு உதவியாக இருந்து வந்த நிலையில் கடந்த 2-ந் தேதி இரவு பெற்றோருடன் தூங்கினாள்.

நள்ளிரவில் பெற்றோர்கள் எழுந்து பார்த்தபோது மாணவியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. அதைத்தொடர்ந்து நேற்று காவேரிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன்பேரில் சப்- இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News